#திருப்பூர் : 15 வயது சிறுமி பலாத்காரம் - போக்சோவில் வடமாநில வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


திருப்பூரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து இவர் தனது 15 வயது மகளுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் குமார்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவத்தன்று தாயிடம் சண்டை போட்ட சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் அக்கம் பக்கத்தில் சிறுமியை தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், மறுநாள் சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தாய் சிறுமியிடம் விசாரித்ததில், பக்கத்து வீட்டை சேர்ந்த அர்ஜுன் குமார், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அர்ஜுன்குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North State youth arrested for raping girl in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->