என்.எல்.சி விவகாரம் பிரதமர் மோடிக்கு..தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்.எல்.சி பணியாளர்கள் விவகாரம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "கேட் மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்வது கடந்த காலங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையில் இருந்து மாறுபட்டுள்ளது.

கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்பது உள்ளூர் விண்ணப்பதாரர்கள் ஐ பாதிப்பு அடையச் செய்வதோடு அவர்களுக்கான வாய்ப்பை பறிப்பதாக அமைகின்றது. கேட் தேர்வு மதிப்பெண்களின் படி தேர்வு என்ற திடீர் அத் தேர்வை எழுத அவர்களுக்கு பெரும் பாதிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் என்.எல்.சி-க்கு நிலம் வழங்கி அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே என்.எல்.சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NLC issue to PM Modi Tamil Nadu Chief Minister MK Stalin's letter


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->