சென்னை அருகே 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்.!! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகியுள்ளது. நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வங்கக்கடலில் நிவர் புயல் வேகம் 4 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு வடக்கே 450 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரி அருகே 410 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த 24 நேரத்தில் தீவிர புயலாக மாறும். 

நாளை மாலை அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nivar cyclone moving to 5 km


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->