கன்னியாகுமரி : கோவில் திருவிழாவிற்கு அனுமதிக்காததால் 9 -ம் வகுப்பு மாணவன் தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : கோவில் திருவிழாவிற்கு அனுமதிக்காததால் 9 -ம் வகுப்பு மாணவன் தற்கொலை.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே புதுவிளை சானல்கரை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் மகன் தீபக். இவர் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவரது ஊர் அருகே உள்ள கோயில் ஒன்றில் திருவிழா நடைபெற்றுள்ளது. 

இந்தத் திருவிழாவிற்கு சென்று வருவதாகக் தீபக் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு தீபக்கின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் மனம் வருத்தமடைந்த தீபக், வீட்டின் அறையில் போய் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுள்ளார்.

நீண்ட நேரமாகியும் தீபக் வெளியில் வராததால், டேவிட் கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். அப்போதும் கதவு திறக்காததால் டேவிட் கதவை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது தீபக் மின் விசிறியில் தூக்குப் போட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

உடனடியாக அவரை மீட்ட டேவிட் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீபக் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nineth class student sucide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->