சோசியல் மீடியாவில் கெத்து காட்டிய நெல்லை பாய்ஸ் கைது! - Seithipunal
Seithipunal


நெல்லையில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து தனது வீட்டில் சுவரை வெடிக்க செய்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த வகையில் தற்போது இரு இளைஞர்கள் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வெடிக்க வைத்ததோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து விசாரணையில் இறங்கிய நெல்லை காவல்துறையினர் நெல்லை மாவட்டம் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித் மற்றும் ஆசாத் நகரைச் சேர்ந்த முகமது தவ்பிக் ஆகியோரை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் சமூக வலைதளங்களில் கெத்து காட்டுவதற்காக யூடியூப் பார்த்து நாட்டு விடுமுறை தயாரித்ததோடு அதன் மூலம் சமூக வலைதளங்களில் கெத்து காட்டுவதற்காக அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் உள்ள வயல்வெளியில் இரவு நேரத்தில் வெடிக்க செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.

அதேபோன்று இவர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க உதவிய சல்மான் என்பவரையும் நெல்லை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களின் கெத்து காட்டுவதற்காக நாட்டு வெடிப்பு தயாரித்த இளைஞர்களுக்கு தற்போது சிறை கம்பியை என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai youths arrested for making country bomb and detonating


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->