"நல்ல புத்தியைக் கொடுத்து கட்சியைக் காப்பாற்ற சொல்லுங்க தலைவா" - கதறி அழுவும் தொண்டர்  - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சி தொடங்கப்பட்டு இதுவரை 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 51 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த விழாவை அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா என்று மூன்று அணிகளாக பிரிந்து இருக்கின்றனர். இத்தகைய செயல்களால் இவர்கள் அதிமுக தொண்டர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில் அதிமுக 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

அப்போது எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த குடியாத்தம் பகுதியின் முன்னாள் நகர செயலாளர் புலிகேசவன் என்பவர்  திடீரென எம்.ஜி.ஆரை கைகூப்பி வணங்கியபடி "இந்தக் கட்சியை ஒன்றாக்கி ஓபிஎஸ், இபிஎஸ்க்கு நல்ல புத்தியைக் கொடுங்க தலைவா. 

இனிவரும் காலங்களிலாவது, தேர்தலில் உங்கள் எண்ணமும், அம்மாவின் எண்ணமும் நிறைவேற வேண்டும். இந்த இயக்கம் அழியாமல் இருப்பதற்கு இருவருக்கும் நல்ல புத்தியைக் கொடுத்து கட்சியைக் காப்பாற்ற சொல்லுங்க தலைவா" என்று கதறி அழுவும்  வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vellore aiadmk 51th year celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->