மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு உரிமையை கோரும் 03 பேர்: அபகரிக்க முயற்சி என போனி கபூர் வழக்கு..!
Boney Kapoor files case against late actress Sridevi for allegedly trying to seize her assets
80 மற்றும் 90 களில் இந்திய திரை உலகில் கனவுகன்னியாக வளம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் சொத்துக்கு 03 பேர் உரிமை கோருவதாக அவருடைய கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1988-இல் சென்னை இ.சி.ஆர் பகுதியில் நடிகை ஸ்ரீதேவி சொத்து வாங்கியுள்ளார். அந்த சொத்துக்கு, போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக அவரின் கணவர் போனி கபூர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது, மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் உரிமை கோருவதாக போனி கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் தாம்பரம் தாசில்தார் பதிலளிக்க உயர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போலி வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் 04 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Boney Kapoor files case against late actress Sridevi for allegedly trying to seize her assets