பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு! - Seithipunal
Seithipunal


வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை  அடுத்த இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரி கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்துவந்தார் . மகன், மகள்கள் சென்னையில் வசித்து வருவதால்  வீட்டில் தனியாகஇருந்துள்ளார் . சம்பவத்தன்று நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் 4 பேர் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அப்போது தூங்கி கொண்டிருந்த  கோடீஸ்வரியை தட்டி எழுப்பி  அந்த  4 பேரும் நகை, பணத்தை எங்கே வைத்துள்ளாய்? என கேட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றித்தரும்படி மிரட்டியுள்ளனர். ஆனால் பயப்படாத கோடீஸ்வரி மறுக்கவே அவரது கை, கால்களை கட்டி தாக்கிஉள்ளனர் . பின்னர் அவர் அணிந்து இருந்த 7½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டதோடு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி கயிறுகளை அவிழ்த்து வெளியே வந்த கோடீஸ்வரி கூச்சலிட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த கோடீஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police spread a net for the mysterious individuals who kidnapped the woman and stole jewelry and money


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->