திருவள்ளூர் : வயிற்று வலியால் கதறிய கூலித் தொழிலாளி - மருந்து குடித்து உயிரிழந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காரணி கிராம பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில், இவருக்கு நேற்று திடீரென ஏற்பட்ட வயிற்று வலி அதிகளரித்துள்ளது. இதனால், மனம் உடைந்த அவர் வலியோடு கடைக்குச் சென்று பூச்சி மருந்து வாங்கி வந்து குடித்துள்ளார். 

இதையடுத்து இவர் வலியால் அலறி துடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். 

அதன் பின்னர், அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கஜேந்திரனின் மகன் குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து  சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tiruvallur man died for stomak pain


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->