திருவள்ளுவர் : கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர் திடீர் சாவு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே ஆரணி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சக நண்பர்களுடன் பெரும்பேடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார். 

அங்கு, விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மூச்சுவிட சிரமமாக உள்ளது என்று நண்பர்களிடம் தெரிவித்த மனோஜ்குமார், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் மனோஜ்குமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோஜ்குமார் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ்குமாரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் சாவுக்கன காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thiruvallur young man died in play ground


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->