மயிலாடுதுறை : திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானதால் நர்சிங் மாணவி தற்கொலை.!
near mayiladuthurai nursing student sucide in seerkazhi
மயிலாடுதுறை : திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானதால் நர்சிங் மாணவி தற்கொலை.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியை அடுத்த பெருந்தோட்டம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் மகள் பிரபாவதி. இவர் சீர்காழியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் பயின்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று பிரபாவதி கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரபாவதி வேப்ப மரத்தில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.அதன் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் பிரபாவதியின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பிரபாவதி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அதில் பிரபாவதி, "நான் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததால் மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளேன். இதை ஆனந்த ராஜிடம் தெரிவித்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல், ஆனந்தராஜ் மற்றும் அவரது சகோதரர்கள், அண்ணி ரஞ்சனி உள்ளிட்டோர் ஆனந்தராஜுடன் திருமணம் செய்து வைக்க முடியாது. நீ செத்துத் தொலை என்றுத் திட்டியுள்ளனர். இதனால் தான் நான் தற்கொலை செய்து கொண்டேன்" என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு காரணமான நான்கு பேரில் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
English Summary
near mayiladuthurai nursing student sucide in seerkazhi