கன்னியாகுமரி - காதலன் கண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலர்கள் இருவரும் கேரளா மாநிலத்தில் பருத்தியூர் என்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் காதலனின் நண்பர் ஒருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து மூன்று பேரும் அங்குள்ள பகுதிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் காதலனையும் அவரது நண்பரையும் கடுமையாக தாக்கியதோடு காதலியை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து தனது மற்ற நண்பர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near kanniyakumari woman harassment


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->