கடலூர் || வேலை முடித்து வீட்டிற்கு வந்த இளைஞருக்கு வழியில் நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் முதுநகர் அடுத்து உள்ள சின்ன பிள்ளையார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இளவரசன் கடலூரில் இருந்து வேலை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். 

இதையடுத்து, இளவரசன் கடலூர் முதுநகர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக இளவரசன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near cuddalore young man died for accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->