பெற்றோரை இழந்த சிறுமி..  பலாத்காரம் செய்த அண்ணன் தம்பி.! - Seithipunal
Seithipunal


பெற்றோரை இழந்து சிறுமி  உறவினர்கள் வீட்டில் வசித்து வந்த போது அவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் அளித்த அண்ணன் தம்பி இருவருக்கும் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம்  ராசபாளையம் பகுதியைச் சார்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சிங்காரவேலு ராஜு என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பெற்றோரை இழந்தவர் அவர். தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்து சிறுமியை  மிரட்டி கிருஷ்ணனின் மகன் ராஜு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர் வேறொரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். அப்போது கிருஷ்ணனின் இன்னொரு மகன் சிங்காரவேலன் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமி விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  இது தொடர்பாக புகார் செய்தார். காவல்துறையினர் சிங்காரவேலன் மற்றும்  ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த கடலூர்சிறப்பு நீதிமன்றம் ராஜூவுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் சிங்காரவேலனுக்கு5 வருட சிறை தண்டனையும் வழங்கி  தீர்ப்பளித்தது. மேலும் சிறுமிக்கு நாலு லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near cudalore minor girl was sexually assuled by brothers 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->