தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.. நடந்தது என்ன?.. நாமக்கல்லில் பெரும் சோகம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகேயிருக்கும் கருக்கம்பாளையம் அருந்ததியர் தெரு பகுதியை சார்ந்தவர் முத்துசாமி. இவர் சொந்தமாக லாரி வைத்து இருக்கிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களின் மகள் அகல்யா (வயது 17). இவர் அங்குள்ள கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூருக்கு சென்றுவிட்ட நிலையில், சாந்தி உறவினரின் வீட்டில் நடைபெற்ற விசேஷத்துக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வருகையில் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்துள்ளது. 

இதனையடுத்து பின்பக்க கதவை உடைத்து உள்ளே செல்கையில், அகல்யா படுக்கையறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு தாய் கதறியழவே, இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அகல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal 17 Year girl Agalya Suicide Police Investigation about Mystery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->