திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் கொடூரமாக கொலை.! மயிலாடுதுறையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கனிவண்ணன் (27). இவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சீர்காழி அருகே உப்பனாற்று கரையில் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கனிவண்ணன் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கனிவண்ணனின் உடலை கைப்பற்றிய பிரதேச பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கனிவண்ணனை யாரோ கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கனிவண்ணனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder of a youth in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->