மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்மணி.! குழம்பி நிற்கும் போலீசார்.!
murder in hosur
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரியை அருகேயிருக்கும் புனல்நத்தம் என்ற பகுதியை சேர்ந்த முனிவெங்கடப்பன் என்பவருக்கு சின்னம்மாதேவி (வயது 40) என்ற மனைவி இருந்துள்ளார்.
பீர்பள்ளி கிராமத்தில் உள்ள தனது விவசாய விளைநிலத்தில் சின்னம்மாதேவி இன்று காலை கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிகமான வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்டந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் இதை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி பின்னர் இச்சம்பவம் குறித்து சூளகிரி காவல் துரையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலை அறிந்த போலீசார் உடனைடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அங்கு விவசாய நிலத்தில் பிணமாக வெட்டுண்டு கிடந்த சின்னம்மாதேவியின் உடலை கைப்பற்றி ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.