ஜெயிலில் கணவன்.. பக்கா ப்ளான் போட்ட ரவுடி மனைவி.., கொத்தாக பிடித்த காவல்துறை!
Murder gang arrest by police
திருப்புவனம் அருகே அமைந்துள்ள மேலராங்கியம் பகுதியை சேர்ந்த லோடு முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லோடு முருகனுக்கும், காட்டனூரைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில், அந்த கும்பலை கொலை செய்ய லோடு முருகனின் மனைவி காளீஸ்வரி திட்டமிட்டுள்ளார். இதற்காக கூலிப் படையை தயார் செய்து கொண்டு புது குளம் கண்மாய் பகுதிக்குள் காளீஸ்வரி கூலி படையுடன் பதுங்கி இருந்துள்ளார்.
அதே நேரத்தில் அந்த வழியில் சாலைகளில் சென்ற சிலரை மறித்து தாங்கள் வைத்திருந்த கொடூர ஆயுதங்களை காட்டி, மிரட்டி அந்த கும்பல் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, யாரோ காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க காவல்துறையினர் விரைந்து வந்து மூன்று குழுக்களாக பிரிந்து பதுங்கி இருந்த கூலிப்படையினரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்களிடமிருந்து அளவுக்கதிகமான கத்தி, வீச்சரிவாள், 20 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது திருப்புவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Murder gang arrest by police