பெற்ற மகனைக் கொன்ற தாய் - மன உளைச்சல் தான் காரணமா? - Seithipunal
Seithipunal


பெற்ற மகனைக் கொன்ற தாய் - மன உளைச்சல் தான் காரணமா?

சென்னையில் உள்ள புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் அரி. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருடைய மனைவி செல்வி. இந்தத் தம்பதியினரின் மகன் பூவரசன். இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தாய், மகன் இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தனர்.

உடனே அவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பூவரசன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் செல்வியிடம் நடத்திய விசாரணையில் மகனை தான் அடித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், செல்வி கடந்த ஒருசில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக மகன் என்றும் பாராமல் செல்வி அடித்ததில் பூவரசன் காயமடைந்து இறந்தாரா? அல்லது எவரும் அறியாத வேறு காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother kill son in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->