திருவண்ணாமலை அருகே பரிதாபம்.! 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வற்றபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சின்னரசு. இவரது மனைவி சூர்யா(32). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 4 மற்றும் ஒரு 1 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சின்னராசுக்கும், சூர்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து சின்னராசு நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததால் அதிர்ச்சடைந்து சின்னராசும், அவரது தாயும் பல்வேறு இடங்களில் தேடினர். அப்பொழுது சூர்யாவின் செல்போனுக்கு போன் செய்தபோது அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு அருகே சத்தம் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்து, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குழந்தைகள் மற்றும் சூர்யாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் உயிரிழந்த சூர்யாவின் உடல் மற்றும் ஒரு வயது மகனின் உடல் மீட்கப்பட்டது. மேலும் நான்கு வயது மகனின் உடலை தேடி வருகின்றனர்.

மேலும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் குடும்பப் பிரச்சனையில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு சூர்யாவும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother committed suicide by throwing her 2 children into the well in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->