மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்..6 ஆண்டுகள் நேர்ந்த கொடுமை ! - Seithipunal
Seithipunal


மகளுடன், தாய் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 38 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்தார்.அப்போது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை  பிரிந்து சென்றுவிட்டார்.  இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்   பங்கேற்ற அந்த மாணவிஅதிர்ச்சி தகவலை வெளியிட்டாள். அதில்  கடந்த 6 ஆண்டுகளாக தன்னை தனது தாயே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள்  இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பள்ளிக்கூடத்துக்கு வந்த போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியதில்  தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதாள். இதையடுத்து போலீசார் அந்த மாணவியின் தாயை பிடித்து  விசாரணை செய்ததில் , திருமணத்துக்கு பிறகு கணவனுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தான் தனது மகளுக்கு கற்றுக்கொடுத்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தார்.

அதையடுத்து போலீசார் அந்த சிறுமியின் தாயை கைது செய்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மகளுடன், தாய் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother caught having gay sex with daughter Six years ago


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->