திருவண்ணாமலை அருகே பரிதாபம்..! தாய்-மகன் தூக்கிட்டு தற்கொலை.! போலீசார் விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் விஜய் (25). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து சொந்த ஊர் வந்த விஜய் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார்.

இதனை தாய் கண்டித்து உள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த விஜய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று இரவு வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் மகன் தற்கொலை செய்து கொண்டது தெரியாமல், மகனை நினைத்து வேதனையில் ஜோதியும் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தாய்-மகன் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and son commits suicide in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->