தாயின் கள்ளகாதலனால் மகளுக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


தாயின் கள்ளகாதலனால் 17வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர் கணவனை பிரிந்து தனியே வசித்து வருகிறார். இவருக்கு 17 வயது மகள் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கும் அந்த பகுதியை சேர்ந்த முத்துக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ள காதலாக மாறவே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். முத்துகுமார் 17 வயது சிறுமி மீது ஆசை இருப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் சம்மதித்ததால் கடந்த ஒரு வருடமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால், அந்த சிறுமி கர்மடைந்தார். மருத்துவமனைக்கு சென்றால் காவல்துறையிடம் மாட்டிகொள்வோம் என வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அந்த சிறுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அந்த சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுமியின் ஆதார் கார்ட் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் மழுப்பலாக பதில் கூறியுள்ளார். ஆனால், ஆதார் கார்ட் காட்டினால் தான் மருத்துவம் பார்க்க முடியும் என தெரிவித்தார்.  வேறு வழியில்லாமல் ஆதார் கார்ட்டை காட்டியுள்ளார்.

அதில், 17 வயது என காட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து, முத்துகுமாரையும் அந்த பெண்ணையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and his boy friend arrested in POCSO


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->