தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மாதம்தோறும் தேர்வு.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் தேர்வு நடத்தி தயார்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இதில் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் சிறப்பு வகுப்புகள் மற்றும் கூடுதல் தேர்வுகளும் நடத்தப்படுகிறது.

அதன்படி தனியார் பள்ளிகளில் தங்களின் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள் மற்றும் தினசரி தேர்வுகள் நடத்தி மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் செய்து வருகின்றனர். அதனால் தனியார் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுகின்றனர்.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளிலும் மாதம் தோறும் தேர்வு நடத்தி அவர்களை பொது தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டிய தேர்வு மற்றும் பாடத்திட்ட விவரங்கள் அனைத்தையும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் அனுப்ப உள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Monthly exams in govt schools


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->