அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்.!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

உடனே அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், ஓமந்தூரார் மருத்துவமனையின் முன்பு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரும் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவருடைய மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், "எனது கணவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. கைது தொடர்பாக குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்று அமலாக்கத்துறையினர் மீது குற்றசாட்டுகளை கூறி, மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister senthil balaji wife petition filed in chennai high court


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->