வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோவில்: புனரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்..! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறை தன் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவில்களில் குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் திருக்கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி ஆணையரின் பொதுநல நிதி ரூ. 1.84 கோடி மற்றும் வடபழனி ஆண்டவர் திருக்கோயில் நிதி ரூ. 1.53 கோடி என மொத்தம் ரூ. 3.37 கோடி மதிப்பீட்டில் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி முன்புற கல்மண்டபம், திருக்கோயிலின் மூன்று புறங்களிலும் நுழைவு வாயில்கள், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் மற்றும் யாகசாலை கட்டுதல் போன்ற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இத்திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார்.  இந்த வடபழனி ஆதிமூலப் பெருமாள் திருக்கோயிலுக்கு கடைசியாக 1960-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ள நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Sekarbabu inaugurated the renovation works of Vadapalani Aadhimoolap Perumal Temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->