நெல்லையில் பரபரப்பு - பால் வியாபாரி வெட்டிக் கொலை.!
milk sales man murder in tirunelveli
திருநெல்வேலி மாநகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில், மூன்றாவது மகன் கண்ணன் என்பவர் பால் வியாபாரமும், தற்காலிகமாக நெல்லையப்பர் கோயிலில் உள்ள கோசாலை பராமரிப்பு பணியையும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில், இவர் வழக்கம் போல் நெல்லையப்பர் கோயிலில் கோசாலை பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய பிறகு மீண்டும் வெளியே கிளம்பி சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று கண்ணனை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது உயிரிழந்த கண்ணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பச்சோரா மற்றும் சரவணகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
milk sales man murder in tirunelveli