தவறுதலாக வங்கி கணக்கில் வந்த ரூ.2 லட்சம்.! திருப்பி கேட்டதால் வியாபாரி விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் தவறுதலாக வங்கி கணக்கில் வந்த ரூ.2 லட்சத்தை செலவு செய்த வியாபாரியிடம் திருப்பி கேட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி முருகேசன் (54). இவரது வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை சில நாட்களாகியும் வங்கி நிர்வாகம் கேட்காததால் அந்த பணத்தை முருகன் செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் திடீரென வங்கியில் இருந்து முருகேசன் வீட்டிற்கு வந்த மேனேஜர், வங்கி கணக்கில் ரூபாய் 2 லட்சம் மாற்றி வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன், மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து முருகேசன் மீது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Merchant commits suicide in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->