தமிழக மக்களுக்கு ஓர் இனிப்பு செய்தி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!
Megathadu Case in Supreme Court Central Government
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணையை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்து, அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை, மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்து, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்க அனுமதி கோரி இருந்தது. இந்த கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் அணையை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுக்கு, ஒப்புதல் வழங்கியதாக செய்திகள் வெளியாகியது.
இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது.
இந்நிலையில், தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அளிக்கப்படவில்லை. இது போன்ற அனுமதி அளிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
English Summary
Megathadu Case in Supreme Court Central Government