திருச்சி மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை..! காவல்துறை விசாரணை..!!
Medical College Student Commited Suicide
இறுதியாண்டு மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர்நிகழ்வாகிறது. மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் தற்கொலை செய்வது நடந்துவருகிறது.
திருச்சி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டசத்திரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் மருத்துவம் பயின்று வந்துள்ளார். இவர் தனது தேர்வுகளை முடிக்காமல் அரியர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இவர் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறபடுகிறது. இந்நிலையில், ரஞ்சித் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Medical College Student Commited Suicide