குமரியில் சோகம் - எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவர் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது மகன் ராம்குமார் எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஐஐடியில், எம்.எம்.எஸ்.டி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ராம்குமார் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தார். இந்த நிலையில், ராம்குமார் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது அறைக்கு தூங்க சென்றார். இதையடுத்து அவர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. 

இதனால், வீட்டில் உள்ளவர்கள் சந்தேகமடைந்து ராம்குமார் அறைக்குச் சென்று பார்க்கும் போது ராம்குமார் வாயில் நுரை தள்ளி, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார்.

அதன் படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mbbs student sucide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->