தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர், வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு பின்புறம் உள்ள கோவை-கேரளா ரயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் ஆண் ஒருவரது உடல் கிடந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். 

பின்னர் வாலிபரின் உடலை போலீசார் மீட்டு கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார், அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் வயது சுமார் 45 இருக்கலாம் எனவும் இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தண்டவாளத்தின் அருகே ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mans body found rotting near railway tracks


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->