டிரைவரை செருப்பால் அடித்த மேலாளர்..மதுரையில் பரபரப்பு!
Manager slaps driver with a slipper commotion in Madurai
உதவி மேலாளர் பஸ் டிரைவரை தனது செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பஸ் டிரைவர்கள் சங்கத்தினரும் பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக ஏராளமானோர் பயணிகள் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.இதனால் அங்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது.
அப்போது திருப்பூர் செல்லும் அரசு பஸ் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிநின்று கொண்டிருந்தது. வெகு நேரம் ஆகியும் பேருந்து எடுப்பதற்கு தாமதமான நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர் கணேசனிடம் கேட்டபோது மேலாளர் கூறினால் மட்டும்தான் பேருந்து எடுத்துச் செல்ல முடியும் என கூறினார்.
பின்னர் பயணிகள் நேரடியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து உதவி மேலாளரிடம் பஸ்சை விரைவாக எடுக்குமாறு வாக்குவாதம் செய்தால் நீங்கள் போகும் இடத்திற்கு செல்ல முடியாது என இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து உதவி மேலாளர் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உதவி மேலாளர் மாரிமுத்து அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை கடுமையாக திட்டியபடி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அப்போது உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென டிரைவர் கணேசனை தனது செருப்பால் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பஸ் டிரைவர்கள் சங்கத்தினரும் பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
English Summary
Manager slaps driver with a slipper commotion in Madurai