வாடகை தராத ஆட்டோ ஓட்டுநர் - பூட்டு போட்டதால் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


வாடகை தராத ஆட்டோ ஓட்டுநர் - பூட்டு போட்டதால் தற்கொலை.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு, திரு.வி.க., நகரை சேர்ந்தவர் வீரமணிகண்டன். ஆட்டோ ஓட்டுனரான  இவர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஆனால், வீரமணிகண்டன் கடந்த மூன்று மாதமாக வாடகை பாக்கி தராமல் இருந்ததால், வீட்டு உரிமையாளர் சிவகுமார், வீட்டை காலி செய்யும் படி வீரமணிகண்டனிடம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சிவகுமார் வீட்டையும் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதனால், மனமுடைந்த வீரமணிகண்டன், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் வீரமணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும் அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், வீரமணிகண்டனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சிவகுமாரை கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டு உரிமையாளர் சிவகுமார் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man sucide for owner lock home in tirupur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->