செல்போன் கடை தொழிலாளி கொலை.. திருவாரூர் அருகே நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


செல்போன் கடையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்த தாய் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மணலியை  சேர்ந்தவர் ராஜ்குமார். அந்த பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்த கடையில் பாரதி மோகன் என்பவர் தனது செல்போனை 700 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் பாரதிமோகன் வீட்டுக்கு சென்ற ராஜ்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மற்றும் அவரது தம்பி பாலமுருகன் தாய் ரேணுகா தேவி ஆகியோர் பாரதிமோகன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி தப்பியோடியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகன் மற்றும் ரேணுகா தேவியை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள ராஜ் குமாரை தேடி வருகின்றனர். செல்போன் அடமானம் வைத்த நகராட்சியில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Murder Near Thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->