மாமனாரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற மருமகன் - திருப்பூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மாமனாரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற மருமகன் - திருப்பூரில் பரபரப்பு.!

மதுரை மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சலீம் முகமது-மும்தாஜ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்துள்ள ராஜாநகரில் வசித்து வந்தனர். அங்கேயே இறைச்சிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வந்தனர். 

இதற்கிடையே சலீம் முகமதுவின் மூத்த மகளான ஷகீலா பானுவுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆனால், ஷகீலாபானு ரம்ஜான் பண்டிகை முதல் தன் பெற்றோ வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது ஷகீலாபானுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு இருந்ததால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஷபிபுல்லா, தன்னுடைய தந்தை, தம்பி, சகோதரி ஆகியோர் ஷகீலாபானு வீட்டிற்கு வந்தனர். 

இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் சலீம் முகமதுவை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லா குடும்பத்தினர் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் சலீம் முகமதுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். 

இதனால், பலத்த காயமடைந்த சலீம் முகமது கீழே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே ஷபிபுல்லா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து உடனடியாக தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதைப்பார்த்து கதறி அழுத ஷகிலா பானு குடும்பத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சலீம் முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் தலைமறைவான நான்கு பேரை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kill father in law in tirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->