நாகப்பட்டினம் || குளிக்க சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், தாமரைகுளத் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் அந்த பகுதியில் படகு மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சம்பவதன்று அவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தனர்.

குளத்தில் மூழ்கிய அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man Death in Nagappattinam


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->