வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் கேன்சல் பண்ண போறீங்களா? கடுமையான டிக்கெட் ரத்து விதிகள்: காசு மொத்தமா போயிரும்! - Seithipunal
Seithipunal


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில், டிக்கெட் ரத்து செய்வதற்கான விதிகள் இதுவரை இருந்த ரயில்களைக் காட்டிலும் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ரயில்களில் RAC (Reservation Against Cancellation) வசதி இல்லாததால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத் திட்டங்களை மிகுந்த கவனத்துடன் வகுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால், டிக்கெட் ரத்து செய்தால் ஏற்படும் நிதி இழப்பு பயணிகளுக்கு பெரும் சுமையாக மாறக்கூடும். இந்த ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ரத்து கட்டண விதிகளின்படி, டிக்கெட் எடுத்த உடனேயே ரத்து செய்தாலும், கட்டணத்தின் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இது சாதாரண எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் உள்ள நிலையான குறைந்த ரத்து கட்டண முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால், செலுத்திய தொகையின் 50 சதவீதம் திருப்பி வழங்கப்படாது. மேலும், ரயில் புறப்பட 8 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும் போது டிக்கெட் ரத்து செய்தால், பயணிகளுக்கு ஒரு ரூபாய் கூட திரும்பக் கிடைக்காது. சாதாரண ரயில்களில் பொதுவாக 4 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயாரிக்கப்படும் நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் 8 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயாரிக்கப்படுவதால் இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் குறைந்தபட்ச பயண தூரத்திற்கான கட்டண விதியும் நடைமுறையில் உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய குறைந்தது 400 கிலோமீட்டருக்கான கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும். மேலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு (Duty Pass) மட்டுமே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதர சிறப்பு கோட்டாக்கள் இந்த ரயிலில் இல்லை.

மொத்தத்தில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டு, கட்டண பிடித்தம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களின் பயணத் தேதிகள், நேரம் மற்றும் அவசியத்தை உறுதியாக முடிவு செய்த பின்னரே டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியமாகியுள்ளது. சிறிய மாற்றங்களுக்கே கூட அதிக நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இந்த புதிய விதிகள் பயணிகளிடையே அதிக கவனத்தை தேவைப்படுத்துகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you going to cancel tickets on Vande Bharat sleeper trains Strict ticket cancellation rules You will lose all your money


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->