அதிக வட்டிக்கு கடன்.. எலக்ட்ரீசியன்  எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், சேலிய மேடு, ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜா . இவருக்கு இளவரசி  என்ற மனைவி 2 மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். 

இதில்,பலர் பணம் கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில், தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை உடனடியாக தருவதற்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த கடனை திரும்ப தர முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த அவர் படுக்கை அறைக்குள் சென்று திடீரென உள்பக்கமாக தாழிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி அக்கம் பக்கத்தினர்  உதவியுடன் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man committed suicide In Puthuchery


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->