விஜய்யின் "ஜனநாயகன்" ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு; ரசிகர்களுக்கு ஏமாற்றம்..! - Seithipunal
Seithipunal


ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்தப்படம் ஜன நாயகன். விஜய்யின் கடைசி படமான இந்த ஜன நாயகன் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 09 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

அத்துடன், 'ஏன் படத்தை ஜனவரி 10-ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது..? தை பிறந்தால் வழி பிறக்குமே..? எனக்கூறி வழக்கை ஜனவரி 07 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு சென்சார் போர்டு வழக்கறிஞர்,  "ஜனநாயகன் படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும் ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும், அதனை மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு.

மறுதணிக்கை குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது என்று பதிலளித்துள்ளார். இதற்கு பின்னர் பேசிய நீதிபதி, "விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு உத்தரவிட முடியும். தணிக்கை வாரியத்தின் Timeline-ஐ பின்பற்றித்தான் ஆக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்படியான சூழலில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை,சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை ஒத்திவைத்தது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு இதுவரை தணிககைச் சான்றதழ் கிடைக்காத நிலையில், ஐரோப்பபிய நாடுகளில் ஜனவரி 09-ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகாது என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷய, ஸ்பெயின், நார்வே, போலாந்து உள்பட 39 க்கும் அதிக நாடுகளில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் பெரிதும் சோகமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ananaayagan has been postponed


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->