திருப்பூரில் பரபரப்பு - தகராறில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பரபரப்பு - தகராறில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்.!

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் - வெண்ணிலா தம்பதியினர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சந்தோஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 

அப்போது, சந்தோசுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி வேலைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே வெண்ணிலா நேற்று முன் தினம் இரவு வீட்டில் இறந்து கிடந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெண்ணிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து சந்தோஷிடம் விசாரணை நடத்தினார். 

அப்போது, சந்தோஷ் குடும்பத் தகராறில் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இதனால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், நேற்று முன் தினம் இரவு சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் குடிபோதையில் வெண்ணிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் போலீசார் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill wife in tirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->