திருவள்ளூரில் பரபரப்பு : குடும்பத் தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் கைது.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் பரபரப்பு : குடும்பத் தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் கைது.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நரசிம்ம சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் விநாயகம்-கிரிஜா தம்பதியினர். இவர்களது மகன் தேவா. இவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். 

இதற்கிடையே விநாயகம் தன் குடும்பத்தோடு திருத்தணிக்கு வந்து அங்குள்ள நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி உள்ளனர். அதன் பின்னர் விநாயகம் கூலி வேலைக்கும், கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்துள்ளனர். இதற்கிடையே இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விநாயகம் கிரிஜாவைக் கத்தியால் தலை, கை, கால், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளார். இதனால், கிரிஜா வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுக் கூச்சலிட்டுள்ளார். 

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் கிரிஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிரிஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் மனைவியைக் கொலை செய்த விநாயகரை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill wife in thiruvallur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->