அரியலூர் : ஊழியரைத் தாக்கி மதுபாட்டில்கள் வாங்கிச் சென்ற இளைஞர்கள் - ஒருவர் கைது.!
man arrested for attack tasmac shop employee in ariyalur
அரியலூர் : ஊழியரைத் தாக்கி மதுபாட்டில்கள் வாங்கிச் சென்ற இளைஞர்கள் - ஒருவர் கைது.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளம் கிராம பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கல்லக்குடி பகுதியில் உள்ள மதுபானக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் பிச்சைபிள்ளை வழக்கம் போல் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது கடைக்கு வந்த மூன்று பேர் பணம் கொடுக்காமல் மது பாட்டில்கள் கேட்டுள்ளனர். இதற்கு பிச்சைபிள்ளை மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் பிச்சைபிள்ளையை சரமாரியாகத் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி மது பாட்டில்களை வாங்கி சென்று விட்டனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் பிச்சைபிள்ளையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி போலீசார் பணம் கொடுக்காமல் ஊழியரை மிரட்டி மது பாட்டில் வாங்கிச் சென்ற மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த மூன்று பேரில் ஒருவரான அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பணம் கொடுக்காமல் ஊழியரைத் தாக்கி மதுபாட்டில்கள் வாங்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for attack tasmac shop employee in ariyalur