மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? கிடைக்காதா? முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், மகளிருக்கான முக்கியத் திட்டங்கள் குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று விஜய் முக்கிய வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், இத்திட்டம் தொடர்பான எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான தொகை விரைவில் பயனாளிகளின் கணக்குகளுக்குச் சென்றடையும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே முந்தைய ஆட்சியில் 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த இத்தொகை, தவெக ஆட்சியில் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், இந்த மாதமே அந்த உயர்வு அமலுக்கு வருமா என்ற ஆவல் மக்களிடையே நிலவுகிறது.

மகளிர் உரிமைத் தொகை ஒருபுறமிருக்க, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையிலும் அரசு வேகம் காட்டி வருகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கவும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை, இன்று மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. அரசின் இந்த உடனடி நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Magalir Urimai Thogai Chief Minister Vijays Key Announcement


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->