மதுரை நாயக்கர் வம்சத்து பேரரசி நிருமதி.ராணி மங்கம்மாள் அவர்கள் பிறந்ததினம்!.
Madurai Nayakkar dynastys great queen Narumathi. It is the birthday of Queen Mangammal
மதுரை நாயக்கர் வம்சத்து பேரரசி நிருமதி.ராணி மங்கம்மாள் அவர்கள் பிறந்ததினம்!.
மதுரை நாயக்கர் வம்சத்து பேரரசி ராணி மங்கம்மாள் (ஜூன் 10, 1649) தனது கணவர் மன்னர் சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப்பின்னர் 1682ல் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு முடி சூட்டி ஆட்சியை மேற்பார்வை செய்துவந்தார், பெரியம்மை நோயால் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் காலமானதும், இவர் 1689 ல் ஆட்சிப்பொறுப்பேற்று 1704ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் மன்னர் சொக்கநாத நாயக்கரின் தளபதி துப்பகுள லிங்கம நாயக்கரின் மகளாவார்.
காவிரி ஆறு உருவாகும் குடகுமலை உள்ளிட்ட மைசூர் நாட்டை ஆட்சி செய்த சிக்கதேவராயர் காவிரி நீர் திருச்சிக்கு செல்வதைத்தடுத்து நிறுத்த அணையைக்கட்டினார், இதைக்கேள்விப்பட்ட ராணி மங்கம்மாள் மைசூர் நாட்டை ஆட்சி செய்த சிக்கதேவராயர் மீது படையெடுத்து, போரில் வென்று கட்டிய தடுப்பு அணையை தகர்த்த பெருமைக்குரியவராவார்.
மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், மதுரையில் இருந்து சிவகங்கை திருப்பத்தூர் வழியாக திருச்சிக்கு நெடுஞ்சாலை அமைத்தவரும் இவரே. தற்காலம் வரை இச்சாலைகளே போக்குவரத்திற்கு பெரும் உபயோகமாக உள்ளது.
இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் குளங்கள், கிணறுகளை உருவாக்கினார். குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத்தேவையான நீர்நிலைகளை பெருக்கினார். மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களை புனரமைப்பு செய்துள்ளார்.
மதுரை நகரை அழகுபடுத்துவதிலும், நகரை விரிவுபடுத்தியதிலும் புகழ்பெற்று விளங்கினார். மதுரையில் பல அன்னச்சத்திரங்களையும் மண்டபங்களையும் உருவாக்கினார். மதுரையின் தற்கால காந்தி மியூசியம் இவரின் அரண்மனையாகும். மதுரை மட்டுமல்லாது திருச்சியிலும் பல கட்டிடங்களை உருவாக்கியுள்ளார்.
English Summary
Madurai Nayakkar dynastys great queen Narumathi. It is the birthday of Queen Mangammal