தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரிக்கு ரெட் அலர்ட்!
chennai imd rain alert red alert
தென்னிந்திய பகுதி மேலாக உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (ஜூன் 15) நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் முன்னெச்சரிக்கையாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு நிலவுகிறது.
நாளை (ஜூன் 16) நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட், மற்ற மாவட்டங்களுக்கு கனமழை சாத்தியம் உள்ளது. ஜூன் 17 -ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் மீண்டும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
IMD Rain மழை
English Summary
chennai imd rain alert red alert