‘தேசியத் தலைவர்’ திரைப்படத்திற்கு தடையா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?! - Seithipunal
Seithipunal


‘தேசியத் தலைவர்’ திரைப்படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், படக்குழுவினருக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன், சாதி அடிப்படையிலான பிரச்சனைகளை தூண்டும் வகையில் உள்ள காட்சிகள் இருப்பதாகக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர், படம் பொதுமக்களுக்கு திரையிடப்படுவதற்கு முன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, அதற்குமுன் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மேலும், குழு பார்வையிட்டபின், விதிமுறைகளுக்கு முரணான அல்லது சமூக விரோதத்தை தூண்டும் காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்கி மட்டுமே வெளியிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை உயர்நீதிமன்றம், திரைப்பட தணிக்கை வாரியம், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம், “படம் இன்னும் திரையிடப்படவில்லை; எனவே, சட்டப்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை முதலில் விளக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சாதி சார்ந்த பிரச்சனைகளை தூண்டும் வகையில் எந்தவித காட்சிகளும் இடம்பெறக் கூடாது என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

desiya thalaivar movie case hc


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->