மகப்பேறு விடுப்புக்குப் பிறகு விருப்பமான மாவட்டத்தில் பணி! 209 பெண் காவலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது!
Maternity leave transferred TN Police
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, குடும்பத்துடன் இருக்க வசதியாக விருப்பமான மாவட்டத்தில் பணியிட மாற்றம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2025 ஜூன் 3ஆம் தேதி வரை 209 பெண் காவலர்கள் விண்ணப்பித்ததன் பேரில், அவர்களது விருப்பத்திற்கேற்ப பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இது, குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், குடும்ப கட்டமைப்பில் சீர்பெறவும் உதவுவதாக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Maternity leave transferred TN Police