மதுரை சித்திரை திருவிழா! 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.! - Seithipunal
Seithipunal


வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 19-ஆம் தேதி வரை 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சித்திரை திருவிழாவிற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஏதுவாக 75 சிறப்பு பேருந்துகள் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பேருந்துகள் திருபுவனம், வாடிப்பட்டி, உசிலம்பட்டியில், மேலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai kallazhagar festival special bus


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->