மதுரை சித்திரை திருவிழா! 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.! - Seithipunal
Seithipunal


வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 19-ஆம் தேதி வரை 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சித்திரை திருவிழாவிற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஏதுவாக 75 சிறப்பு பேருந்துகள் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பேருந்துகள் திருபுவனம், வாடிப்பட்டி, உசிலம்பட்டியில், மேலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai kallazhagar festival special bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->