மகளிர் கல்லூரி விடுதியில் ஆண் சமையலர் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
Madurai Collector order female cook appoint in womens college hostel
மகளிர் கல்லூரி விடுதியில் ஆண் சமையலர் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
மதுரை மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. தன்னாட்சி பெற்ற இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு என்று தங்கும் விடுதியும் இந்த கல்லூரி வளாகத்திலேயே இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற வகையிலும் சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் படி மதுரை கோட்டாட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
ஆய்வு குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இதைப்பார்த்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று ஸ்ரீமீனாட்சி கல்லூரி மாணவியர் விடுதியில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பெண்கள் கல்லூரி விடுதியில் ஆண் சமையலர்கள் பணியில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அவர்களை பணியிலிருந்து விடுவித்த மாவட்ட ஆட்சியர், பெண் சமையலர்களை நியமிக்கவும், அவர்கள் நியமிக்கப்படும் வரை கல்லூரி மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கவும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் படி கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு திருவிழா விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Madurai Collector order female cook appoint in womens college hostel